மே 3, 2019:

ஏழ்மையில் வாடும் ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு கல்விச் செலவிற்காக ஸ்ரீ ஹயக்ரீவர் டிரஸ்ட் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

புகைப்படங்கள் கேலரி பகுதியில் காணலாம்.

ஏப்ரல் 14 2019:

தமிழ் புத்தாண்டு அன்று சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்கள் விரைவில் குணமடைவதற்கு ப்ரார்த்தனை செய்தோம். திருப்பதி அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.

நோயுற்றவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்கள் மனவாட்டத்தை போக்கி, தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை அளிக்கும் பொருட்டு, நல்ல உள்ளங்கள் கொண்ட சமூக சேவகர்களுடன் இந்த சீரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

புகைப்படங்கள் கேலரி பகுதியில் காணலாம்.